பவுலடிகளார் பயணத்தின்று பாடம் 10
பரலோக தரிசனத்திற்குக் கீழ்ப்படிதல் – அப்போஸ்தலர் 26:19
பவுல் அகிரிப்பா ராஜாவிற்கு முன்பாகத் தன் வாழ்வின் மாற்றத்தைப் பற்றி சாட்சி சொல்லும் போது இதைக் குறிப்பிடுகிறார். தமஸ்கு பாதையில் அவர் கண்ட தரிசனம் வெறும் கனவு அல்ல, அது ஒரு கட்டளை என்பதை அவர் உணர்ந்திருந்தார். "அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரலோக தரிசனத்திற்குக் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை" என்கிறார் பவுல். ஒரு மனிதன் தன் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுகொண்ட பிறகு, அதற்குத் தன்னை முழுமையாக ஒப்படைப்பதே உண்மையான கீழ்ப்படிதல்.
1. என் வாழ்க்கையின் நோக்கம் அல்லது கடவுள் எனக்குக் கொடுத்த தரிசனம் என்ன என்பதை நான் அறிவேனா?
2. அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கும் உலகக் காரியங்கள் எவை?
3. சவால்கள் வரும்போது என் தீர்மானத்தில் நான் உறுதியாக இருக்கிறேனா?
தெளிவான இலக்கும் (Vision) அதற்குரிய கீழ்ப்படிதலும் ஒரு மனிதனை வரலாற்றில் நிலைநிறுத்தும். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். அதை உணர்ந்த பிறகு, உலக ஆதாயங்களுக்காகவோ அல்லது பயத்தாலோ அந்த நோக்கத்தை விட்டு விலகிவிடக் கூடாது. கீழ்ப்படிதல் என்பது ஒருநாள் அல்லது ஒருமுறை செய்யும் செயலல்ல, வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு அர்ப்பணிப்பு.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
Lessons from Paul's Life Journey
Acknowledgement
Meyego

0 Comments