1) ஆகாத சம்பாஷணைகள்
=நல்லொழுக்கத்தை கெடுக்கும்=
- 1 கொரி 15:33
2) கடுஞ் சொற்கள்
= கோபத்தை உண்டாக்கும்=
- நீதி 15:1
3) வாயில் இருந்து புறப்படுவது
= மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்)
=
- மத் 15-11
4) பெருமை பேசும் நாவை
= கர்த்தர் அறுத்து போடுவார்=
- சங் 12:3.
5) வாயினால் பாவம் செய்தால் = கைகளின் கிரியை அழிக்கப்படும்=
- பிரசங்கி 5:6.
6) பேசும் வீண் வார்த்தைகளுக்கு
=நியாயத்தீர்பபு உண்டு
- மத்தேயு 12:30.
7) வீண் பேச்சு = அவபக்தியை உண்டாக்கும்=
- 2 தீமோ 2:16
8) வீண் பேச்சு பேசினால்
=கர்த்தரை விட்டு விலகி போவோம்=
- 1 தீமோ 1:6
9) வாயின் வார்த்தை
= மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் =
- பிரசங்கி 5:6
10) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால்
= நியாயத்தீர்பபு உண்டு=
- யாக் 5:9
11) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால்
=அழிவோம்=
- கலா 5:15
12) நாவை அடக்காதவன் தேவ பக்தி
= வீண்=
-யாக் 1:26.
"துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீருற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது" (யாக்கோபு 3:10-12).
0 Comments