நேர்மையான இறையதிகாரம்
சங்கீதம் 82 என்பது ஆசாப்பின் ஒரு தீர்க்கதரிசன சங்கீதமாகும். இது, அநீதியை நிலைநிறுத்தும் ஊழல் தலைவர்கள் அல்லது ஜீவிகளை ("தேவர்கள்") நியாயந்தீர்ப்பதற்காக, யாவே கடவுள் தெய்வீக சபையில் செயல்படுவதை குறிக்கிறது.
கடவுளின் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் அதிகாரம் பெற்ற நீதிபதிகள் 'தேவர்கள்' என்ற உயர்ந்த பட்டத்தால் மதிக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் ஏழைகளையும், திக்கற்றவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் புறக்கணித்ததாகவும், மேலும் இதனால் "தேவர்கள்" மனிதர்களைப் போல மரிப்பார்கள் என்றும் எச்சரிக்கிறது.
சங்கீதம் 82:1–8 விடுதலைக்காக ஜெபிக்க நம்மை வழிநடத்துகிறது. ஏனென்றால்..
1. தெய்வீக அதிகாரம்: எல்லா தேசங்களுக்கும் அதிகாரங்களுக்கும் மேலான இறையாண்மையுள்ள நியாயாதிபதியாக யாவேவை இந்த சங்கீதம் உறுதிப்படுத்துகிறது.
2. இறையாட்சிப் பொறுப்பு: சக்திவாய்ந்த ஆட்சியாளர்கள் கூட உன்னத நியாயாதிபதிக்குக் கணக்குக் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள்.
3. அநீதியின் மீதான நியாயத்தீர்ப்பு: துன்மார்க்கர் மீது பாரபட்சம் காட்டுவதையும், தேவையுள்ளவர்கள் மீது அக்கறை காட்டாமல் இருப்பதையும் கடவுள் கண்டிக்கிறார்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ

0 Comments