வசனம்: "அன்றியும் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் செய்கிறது என்ன?..."
கடினம்: மரித்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் ஞானஸ்நானம் எடுக்கலாமா? இது வேதாகமக் கோட்பாட்டிற்கு மாறானது அல்லவா?
விளக்கம்: அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வழக்கத்தை ஆதரிக்கவில்லை. மரித்தோர் உயிர்த்தெழுதலை மறுதலித்த சில கள்ளப்போதகர்களுக்குப் பதிலளிக்கும் போது, "மரித்தோர் உயிர்த்தெழுவது இல்லை என்றால், உங்கள் மத்தியில் சிலர் (தவறான நம்பிக்கையில்) மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் எடுப்பது ஏன்?" என்று அவர்களின் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டவே இதைக் குறிப்பிடுகிறார்.

0 Comments