Ad Code

சிலுவை நிழலில் அனுதினம் அடியான் | Siluvai Nilalil Anuthinan Adiyan | Lent Songs

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ!
     சிலுவையின் அன்பின் மறைவில்
     கிருபையின் இனிய நிழலில்
     ஆத்தும நேசரின் அருகில்
     அடைகிறேன் ஆறுதல் மனதில்.

1.பாவப் பார சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே
   சிலுவையண்டை வந்ததினால்
   சிறந்த சந்தோஷம் கண்டதால்
   இளைப்படையாது மேலோகம்
   ஏகுவேன் பறந்தே வேகம்.

2.இன்பம் சுரந்திடும் திருமோழி கேட்டேன்
இன்னல்கள் மற்ந்திடுவேன்
    திருமறை இன்னிசை நாதம்
    தேனிலு மினிய வேதம்
    தருமெனக் கனந்த சந்தோஷம்
    தீர்க்குமென் இதயத்தின் தோஷம்.

3.எவ்வித கொடிய இடறுக்கு மஞ்சேன்
இயேசுவை சார்ந்து நிற்பேன்
   அவனியில் விய்யகுலம் வந்தால்
   அவரையே நான் அண்டிக் கொண்டால்
   அலைமிக மோதிடு மந்தாள்
   ஆறுதல் அளிப்பாரே சொன்னால்.

Post a Comment

0 Comments