உங்க கரம் இருக்க பயமில்லையே-2
எந்த பாதையையும் தாண்டிடுவேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2
உங்க கரம் இருக்க பயமில்லையே-2
1.கருவிலே என்னை கண்டவரே
பெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2
நன்மைகள் எனக்காய் செய்பவரே
வழுவாமல் என்னை காத்தவரே
இனிமேலும் என்னை காப்பவரே
- என்னை அழைத்தவரே
2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2
மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்
வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி
எனக்கான நன்மையை காண செய்வீர்
- என்னை அழைத்தவரே
0 Comments