✋ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக ஒரு பெரியவர் அமர்ந்திருந்த டேபிள் அருகே குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்.....
மதிய உணவுக்கு எவ்வளவு பில் போடுவீர்கள்...
✋உரிமையாளர் சொன்னார்...
பொரியல், கூட்டு குழம்புடன் ரசம் மற்றும் தயிர் 100,
தயிர் இல்லாமல் 80 ரூபாய்.
✋கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 20 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினார்...
இதுவே என் கையில் உள்ளது..
இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க....
வெறும் சாப்பாடுனாலும் பரவாயில்லை..மிகுந்த பசி.
நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை
என்று சொல்லத் தயங்கும் அவரது வார்த்தைகள்.
அவரது தொண்டையோ நடுங்குகிறது....
✋ஹோட்டல் உரிமையாளர் குழம்போடு... அனைத்தையும் அவருக்கு பரிமாரினார்.
✋அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றேன்....
✋அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன...
✋நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்..?
அந்த வார்த்தையைக் கேட்ட உரிமையாளரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொல்லத்தொடங்கினார்.
✋எனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்....
✋எனக்கு மூன்று குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்.....
மூவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்....
✋நான் சம்பாதித்த ஒவ்வொரு பைசாவையும் அவர்களின் உயர்வுக்காக செலவழித்தேன். அதற்காக என் இளமையையும், 28 ஆண்டுகால பௌதிக வாழ்க்கையையும் இழந்து புலம் பெயர்ந்தேன்...
✋எல்லாவற்றுக்கும் மேலாக என் மனைவி என்னைத் முதுமையில் தனியே விட்டுவிட்டு மேலே போய்விட்டாள்....
✋சொத்து பிரிவினை செய்ய ஆரம்பித்ததில் இருந்து என் மகன்கள், மகள்கள் என்னைத் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.
✋நான் அவர்களுக்குச் சுமையானதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தேன்.
மெல்ல மெல்ல என்னைத் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்....
✋எனக்கு வயதாகிவிட்டதல்லவா...
குறைந்தபட்சம் என் வயதிற்காகவாவது மதிப்பு தரக்கூடாதா?
✋அவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகு தான் நான் இரவு உணவிற்கு செல்வேன், அப்படியும், அப்போதும் எதற்காவது திட்டுவதும், கூச்சலிடுவதும் தவற வில்லை, சாப்பாடு கண்ணீரும் உப்பும் கலந்திருந்தது.
✋பேரக் குழந்தைகள் என்னிடம் பேசுவதே இல்லை. அப்படி பேசுவதை பார்த்தால் அம்மா அப்பா அடித்து விடுவார்களோ என்ற பயத்தில்...
இந்த வேதனையடுப்பில் அங்கு எப்படி வாழ முடியும்..
✋இரவும் பகலும் வியர்வை சிந்தி, நல்ல தூக்கமின்றி உழைத்து, வயிற்றுக்குகூட விரும்பியதை சாப்பிடாமல், அவளும் நானும் சேர்த்த பணத்தில் வாங்கிய இந்த வீடு... எல்லாம் இருந்தும் நான் இப்போது தெருவில்...
✋ஆனால் நான் என்ன செய்வது? மருமகளின் தங்கத்தை திருடிவிட்ட தாக - சாக்குப்போக்கில்- திருடனாக முத்திரை குத்தப்பட்டேன்... மகன் கோபமடைந்தான், நல்லவேலை கை நீட்ட வில்லை. அந்த பாவத்தை அவன் செய்யவில்லை.
அது என் அதிர்ஷ்டம். அங்கேயே நான் இருந்து இருந்தால் அது நிகழ்ந்து இருந்தாலும் இருக்கலாம்,
இப்படியாக தன் பேச்சை நிறுத்திக் கொண்ட முதியவர்,
✋சாப்பாட்டின் நடுவில் எழுந்தார்..
உரிமையாளர் முன் 20 ரூபாய் தாளை எடுத்து நீட்டினார்..
ஆனால் உரிமையாளர், "வேண்டாம், பையில் வையுங்கள், இருக்கட்டும்....
✋நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம்...
✋நீங்கள் எப்போதும் மதிய உணவு சாப்பிடலாம்" என்றார்
ஆனால் அந்த மனிதர் அந்த 20 ரூபாயை அங்கேயே அவர் மேஜை மீது வைத்துவிட்டு....
✋உங்கள் உதவிக்கு மிக்க மகிழ்ச்சி....
என்னை பற்றி என்ன நினைக்கிறாய்...?
சுயமரியாதை என்னை விட்டு என்றும் விலகாது, வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்ப அவரை அழைத்த உரிமையாளர் அவரிடம் ஒட்டலில் பணிக்கு சேரமுடியுமா எனக்கேட்க முதியவரின் கண்களிள் நீர் வழிந்தது. அந்த நொடி முதல் அவர் அந்த ஓட்டலின் முதியவர் supervisor ஆக அவரிடம் ஒர் மலர்ச்சியும்,அவரின் நடையில் ஓர் மிடுக்கும் தெரிய ஆரம்பித்தது.
✋ ஒரு சிறு துணிமூட்டையையும், கைத்தடியையும் எடுத்துக்கொண்டு திக்கு தெரியாத இடம் நோக்கி வந்த அந்த முதியவர் புதிய வாழ்க்கையை தொடங்கினார்.
அந்த மனிதர் என் மனதில் ஏற்படுத்திய வலி இன்று வரை ஆறவில்லை.
அதனால்தான் *"ஒவ்வொரு துளிருமே கட்டாயம் ஒரு நாள் பழுத்து சருகாகும்"* என்று கூறப்படுகிறது.
பழுத்த சருகுபோன்ற பெரியவர்களை கண் போல் காக்க வேண்டும்.
பெற்றோரை பேணுவோம்!!!
0 Comments