Ad Code

யோசுவா: தற்பரிசோதனைக்கான ஜெபம் • Joshua Prayer

தவக்கால தியானம்: 
தலைப்பு: யோசுவா: தற்பரிசோதனைக்கான ஜெபம்
வேத பகுதி: யோசுவா 7:1-15

வேதாகம நபர் குறிப்பு
யோசுவா, மோசேயின் விசுவாசமான உதவியாளராக இருந்து, இஸ்ரவேல் மக்களை வாக்களிக்கப்பட்ட தேசத்துக்கு அழைத்துச் சென்ற தலைவர். அவர் தேவனின் வழிகாட்டுதலுக்கு உடன்பட்டவன். 

விளக்கவுரை
ஆயி நகரை எதிர்த்து போரிடும்போது, ஆகான் என்பவன் தேவனின் கட்டளையை மீறி, கொள்ளையிடப்பட்ட சில பொருட்களை வைத்துக்கொண்டான். இதனால் இஸ்ரவேல் தோல்வி கண்டது.

1. மறைமுக பாவத்தின் விளைவு:
ஒருவரின் மறைமுக பாவம் எப்படி ஒரு முழு சமுதாயத்தையும் பாதிக்கலாம் என்பதற்கான சாட்சி இந்த சம்பவம். முழு இஸ்ரவேல் மக்களும் போரில் தோல்வியடைந்தனர். ஒருவரின் தவறு, அனைவரையும் பாதிக்கக்கூடும் என்பதைக் காணலாம்.

2. தேவனிடம் நேர்மையாக இருக்க வேண்டும்:
யோசுவா, இந்த தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தேவனிடம் சென்று மனமிரங்கிப் பிரார்த்தித்தார். தேவன், "உங்கள் மக்கள் என் கட்டளைகளை மீறினார்கள்" என்று வெளிப்படுத்தினார். நம்முடைய வாழ்க்கையிலும் நாம் செய்த தவறுகளை மறைக்காமல், தேவனிடம் ஒப்புக்கொள்வதே முக்கியம்.

3. பாவத்திலிருந்து வெளிவர வேண்டும்:
யோசுவா, ஆகானின் பாவத்தை வெளிப்படுத்தினார், தேவனின் நீதியை நிறைவேற்றினார். இதனால், இஸ்ரவேல் மக்கள் மீண்டும் தேவனின் ஆசீர்வாதத்தை பெற்றனர். நாம் தேவனிடம் சென்று மன்னிப்புக் கேட்டால், அவர் நம்மை புத்துணர்ச்சியுடன் நடத்துவார்.

முடிவுரை:
ஒருவரின் மறைமுக பாவம், பலரையும் பாதிக்கலாம்.
தேவனிடம் நேர்மையாக இருந்தால் தான் உண்மையான ஜெயம் கிடைக்கும்.
தவறுகளை ஒப்புக்கொண்டு, தேவனின் வழியில் நடக்க முயற்சிக்க வேண்டும்.
எதுவாக இருந்தாலும், நாம் தேவனிடம் விசுவாசமாக இருக்கணும். அப்போ தான் உண்மையான ஜெயம் நம்மை தேடி வரும்!

கற்றுக்கொள்ளும் பாடம்:
கரண்சிங்

எழுதியவர்

Coordinated by 
SMC Youth Fellowship 

Post a Comment

0 Comments