தாஸ் என்ற இராமதாஸ் எபனேசர் இல்ல திருமண விழா
தெற்கு கல்லிடைக்குறிச்சி இராஜீவ் நகர் (பொத்தை) பகுதியில் வசித்து வரும் நினைவில் வாழும் அன்பிற்குரிய தம்பி செ.தாஸ் என்ற இராமதாஸ் எபனேசர் - கோயில் பொன்னுத்தாய் தம்பதியரின் மகள் *இரா.செலின் ஸ்வீட்லின் - யே.கோல்டன் ரதிஸ்* திருமணம் கல்லிடைக்குறிச்சி CSI கிறிஸ்து தேவாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது திருமண வரவேற்பு நிகழ்வு தேவாலய வளாகத்தில் உள்ள கனம்.ரேணியஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க ஆண்டவர் பேரருள் புரிந்தார்.
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இராஜீவ் நகர் பொத்தையில் அன்பிற்குரிய தம்பி தாஸ் இல்லத்தில் ஞாயிறு பள்ளி நடைபெற்று வந்தது. குட்டி பிரசங்கியார் திருபால் ஆண்ட்ரூஸ் அவர்கள் நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு உறுதுணையாக நேரம் கிடைக்கிற பொழுது நானும் அந்த ஞாயிறு பள்ளி நடத்த சென்றிருக்கிறேன். அந்த காலகட்டத்தில் சில ஆண்டுகள் விடுமுறை வேதாகம பள்ளியை தம்பி தாஸ் இல்லத்தில் நானும் எனது மனைவியுமாகச் சென்று நடத்த ஆண்டவர் பேரருள் புரிந்தார். அந்த காலகட்டத்தில் தம்பி தாஸ் அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் குறிப்பாக தம்பி தாஸ் அவர்களின் தாயார் தங்கம் அம்மாள் அவர்களும் தாஸின் மனைவி தாஸின் தங்கைமார்கள் தம்பி என அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு என்றும் நினைவு கூறத்தக்கது. அந்த காலகட்டத்தில் தாஸ் வீட்டை ஒட்டி அவர்களுக்கு சொந்தமான மூன்று செண்ட் காலி நிலமும் இருந்தது. அந்த இடத்தை தேவாலயம் அமைக்க தரவும் தம்பி தாஸின் தாயார் தங்கம் அம்மா அவர்கள் தயாராக இருந்தார்கள்.
அக்காலத்தில் தாஸ் மற்றும் அவனது மனைவி தவிர்த்து பிற அனைவரும் கிறிஸ்தவர் அல்லாதவராகவே இருந்தார்கள் ஆனால் அவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள் .
அக்காலத்தில் தாஸின் தாயார் மற்றும் தங்கைமார் குடும்பத்தினர் அனைவரும் கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெறவும் ஆயத்தமாக இருந்தார்கள். கல்லிடைக்குறிச்சி
சபை மற்றும் சேகர் அளவிலான ஒத்துழைப்பு கிட்டாததால் அந்த நேரம் அந்த காரியங்கள் எதுவும் கைகூடவில்லை.
ஞாயிறு பள்ளிக்கும் விடுமுறை வேதாகம பள்ளிக்கும் சிறு பிள்ளைகளை அழைத்து ஒன்று சேர்ப்பதில் தம்பி தாஸ் குடும்பத்தார் தாஸின் தாயார் என அனைவரும் உற்சாகமாக செயல்படுவார்கள்.
தற்போது தாஸ் வீட்டின் எதிர்ப்புறம் திரு சார்லஸ் நியூட்டன் - திருமதி கனகா நியூட்டன் அவர்களது இல்லத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஞாயிறு பள்ளி நடைபெற்று வருகிறது விடுமுறை வேதாகம பள்ளியும் நடைபெற்று வருகிறது. கிராம சிறுவர் ஊழியம் சார்பாக நானும் எனது மனைவியும் சென்று நடத்தி வருகிறோம்.சிறுவர் ஊழியங்கள் அந்த பகுதியில் தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்
என்னை உடன் பிறந்த அண்ணனைப் போல் நேசிக்கும் அன்பிற்குரிய தம்பி தாஸ் மட்டுமே அக்காலத்தில் திருமணம் காரணமாக அவர்களது குடும்பத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தார். தம்பி தாசின் மனைவி கோயில் பொன்னுத்தாய் மேல மெஞ்ஞானபுரம் என்ற ஒரு பாரம்பரிய கிறிஸ்தவ கிராமத்தில் இருந்து வந்தவர்.
தம்பி தாஸின் தந்தை அன்பிற்குரிய திரு.Y. செல்வராஜ் அண்ணன் அவர்கள் பாரம்பரியமிக்க கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்தவர் ஆனாலும் அவர் கிறிஸ்தவத்தில் திருமணம் செய்ய வில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தலையின் உட்புறம் ஏற்பட்ட காயம் அதன் காரணமாக ஏற்பட்ட மூளை நரம்பியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட தம்பி தாஸ் திடீரென மரணம் அடைந்தது குடும்பத்தாருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.ஆனாலும் ஆண்டவருடைய பலத்தால் அவனுடைய மனைவி கோயில் பொன்னுத்தாய் அதைத் தாங்கியவராக மகள் செலின் ஸ்வீட்லினையும் மகன் கிப்சனையும் ஆண்டவருடைய பெரிய கிருபையால் வளர்த்தார்கள்.
மகள் செலின் ஸ்வீட்லின் M.Com கல்வி கற்றார். கல்லிடைக்குறிச்சியின் ஞாயிறு பள்ளியில் ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டார்.
இன்று குருத்துவ கல்வி பயின்றுள்ள திருமண்டல சபை ஊழியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இராமையன்பட்டி திருச்சபையில் பணி செய்கிற திரு. கோல்டன் ரதிசை திருமணம் செய்துள்ளார் ஆண்டவருக்கு மகிமையாக திருமணம் மற்றும் திருமண வரவேற்பு சிறப்பாக நடைபெற்றது.
அன்பிற்குரிய தாஸ் சிறு வயது முதல் கிறிஸ்தவ அடிப்படையில் வளர்க்கப்படாவிட்டாலும் திருமணத்திற்கு பின்பு கிறிஸ்தவத்தில் உறுதியாக இருந்தவர். இராஜிவ் நகர் பொத்தை பகுதியில் 2019 செப்டம்பரில் நடைபெற்ற கல்லிடைக்குறிச்சி சேகர சுவிசேஷ ஊழியத்தின் போது வேன் மூலம் அங்கு நமது சபை மக்கள் ஊழியத்திற்காக இறங்கிய போது கல்லிடைக்குறிச்சி இந்து முன்னணி தலைவராக உள்ள வடக்கு புதுத்தெரு ஆட்டோ டிரைவர் வேல்பாண்டி என்பவர் தமது இந்து முன்னணி ஆட்களுடன் நமது சபையில் இருந்து ஊழியத்திற்கு ராஜிவ் நகர் பொத்தைக்கு சென்றவர்களை வழிமறித்து ஊழியம் செய்ய விடாமல் தடுத்து அவர்கள் வந்திறங்கிய வேனிலேயே அனைவரையும் ஏற்றி ஊழியம் நிறைவடையும் இடமாகிய மணிமுத்தாற்றில் கொண்டு போய் இறக்கி விட்டு அவமானப்படுத்திய ஒரு சம்பவம் நடைபெற்றது. இதை அந்நேரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் வசித்து வந்த நான் அறிந்ததும் உடனடியாக தொலைபேசி மூலம் அன்பிற்குரிய தம்பி தாஸிடம் தொடர்பு கொண்டு கேட்டேன்.அந்நேரம் காலாண்டு விடுமுறைக்காக குடும்பமாக கல்லிடைக்குறிச்சிக்கு வந்த போது நேரிலும் அவனிடம் இது குறித்து கேட்டு தம்பி நீங்கள் எல்லாம் வசிக்கும் பகுதியில் தானே இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது என கேட்டேன். அந்த சம்பவத்தை அறிந்ததும் மிகவும் மன வேதனைப்பட்டவர்களில் அன்பிற்குரிய தம்பி தாஸும் ஒருவர். அண்ணன் நமது சபை மக்கள் ஊழியத்திற்கு வருவது எனக்கு தெரியாது நானும் அந்த நேரத்தில்இங்கு இல்லை தெரிந்திருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பாக நான் நின்றிருப்பேன். அவமானகரமான அந்த சம்பவம் நடைபெற்றிருக்க விட்டிருக்க மாட்டேன் என வைராக்கியத்தோடு சொன்ன தாசின் வார்த்தை இன்றளவும் என் மணக்கண் முன் இருக்கிறது.
இப்படிப்பட்ட வைராக்கியம் கொண்ட அன்பிற்குரிய தம்பி தாஸின் மகள் இரா.செலின் ஸ்வீட்லின் - யே. கோல்டன் ரதிஸ் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைய அனைத்து வகை செல்வங்களையும் மணமக்கள் பெற்று ஆண்டவருக்கு மகிமையாய் நீடூழி காலம் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டுகிறேன்
அன்புடன்
ஜா.ஜான் ஞானராஜ்
கல்லிடை.
0 Comments