ரூத் எந்த சூழலில் யாரை நம்பி பெத்லகேம் வந்தாள்?
1. கணவன் இல்லை.
2. பிள்ளை இல்லை.
3. மாமனார் இல்லை.
4. மாமியார் வா என கூப்பிடவில்லை. (வர வேண்டாம் என்று தான் நகோமி சொன்னாள்)
5. பெத்லகேமுக்கு இதற்கு முன் சென்றது இல்லை.
இழப்புக்களைச் சந்தித்த எதிர்மறையான சூழலைத் தாண்டி புதிய சூழலில் ரூத் யாரை நம்பி முடிவு எடுத்தாள்?
"உம்முடைய கடவுள், என்னுடைய கடவுள்"
மனிதரை நம்பி அல்ல; கடவுளை நம்பி ரூத் பெத்லகேம் வர முடிவு எடுத்தாள். கடவுளின் திட்டத்தைப் புரிந்து செயல்பட முன்வந்தாள்.
1. கணவன் குடும்பத்துக்கு துரோகம் செய்யவில்லை.
2. இன்னொரு வாழ்வைத் தேடவில்லை.
3. மாமியாரைத் தனியாக விடவில்லை.
4. தன் சொந்த மோவாபிய மண்ணை விரும்பவில்லை.
5. எதிர்மறையான சூழலுக்கு கடவுளைக் குறைசொல்லவில்லை.
ஆதாரம்: ரூத் 1 -4 அதிகாரங்கள்

0 Comments