மேற்கொள்ள விடார்
முகஸ்துதி செய்பவர்கள், முதுகில் குத்துபவர்கள் மற்றும் எதிரிகளால் சூழப்பட்டிருந்த சமயங்களில், மற்றும் வார்த்தைகள் வாள்களை விட கொடிய ஆயுதங்களாக இருந்த சமயங்களில் தாவீது இந்த 12 ஆம் சங்கீதத்தை எழுதியுள்ளார். ஒருவேளை சவுலை விட்டு ஓடிப்போகும்போது வந்த பிரச்சனைகளின் மத்தியில் எழுதியிருக்கலாம்.
தேவபக்தியுள்ள மற்றும் உண்மையுள்ள மக்கள் காணாமல் போவதைப் பற்றி தாவீது புலம்புகிறார், நம்பகமான தலைவர்கள் அல்லது நண்பர்கள் கூட நேர்மையற்றவர்கள் என்று உணர்கிறார். இது ஆன்மீக சிதைவின் காலத்திற்கு பொருந்தும் உணர்வு.
ஆனால் மனித வஞ்சகத்திற்கு மாறாக, இந்த சங்கீதம் கடவுளின் வார்த்தைகளின் முழுமையான தூய்மை, உண்மை மற்றும் நம்பகத்தன்மையை வலியுறுத்துகிறது, அவை ஏழு மடங்கு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப் போல, உறுதியான அடைக்கலத்தை அளிக்கின்றன.
ஆம்,
1. மானிடர் பக்தி மாய்மாலமாகலாம்
இறைவார்த்தை மெய்யானது.
2. மானிடர் இரண்டகமாக பேசலாம்
இறை வார்த்தை ஒரே தன்மையானது.
3. மானிடர் மாறிப் போகலாம்
இறைவன் மாறாதவர்
ஆகவே, மனிதர்களைப் பார்க்காமல், கடவுளையும், அவர் வார்த்தையையும் நோக்கிப்பார்த்து, நம்பி வாழ்வோம். ஆண்டவர் சண்டாளரை (பொல்லாதோர்) மேற்கொள்ள விடார்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments