அறியாமை இருளில் வீழ்ந்தேன்!
சுயமெனும் சிறைக்குள் சிக்கி - என்
தூய்மைப் போர்வையைக் கிழித்தேன்.
இன்பம் என்று எண்ணி - நான்
துன்பக் கடலில் குதித்தேன்,
பாவம் எனும் நஞ்சை - என்
பருகு நீராகக் குடித்தேன்!
சுமக்க முடியா பாரம் - என்
சுகத்தை எல்லாம் தின்றது,
மனசாட்சி என்னும் முள் - என்
மகிழ்ச்சியைக் குத்திச் சென்றது.
கன்மலையை நோக்கி அழுதேன் - என்
கதறல் பரலோகம் எட்டியது!
கல்வாரி நாதனின் இரத்தம் - என்
கறைகள் அனைத்தையும் கழுவியது.
மன்னிப்பு என்னும் மழையில் - என்
மரண பயம் நீங்கியது,
மாசில்லா இயேசுவின் அன்பில் - என்
மறுவாழ்வு இன்று துவங்கியது!
திருவிவிலிய வசனம்:
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையுமநீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9)

0 Comments