ஓசன்னா பாலர் பாடும்
ராஜாவாம் மீட்பர்க்கே;
மகிமை புகழ் கீர்த்தி
எல்லாம் உண்டாகவே.
1. கர்த்தாவின் நாமத்தாலே
வருங் கோமானே நீர்
தாவீதின் ராஜ மைந்தன்
துதிக்கப்படுவீர்.
2. உன்னத தூதர் சேனை
விண்ணில் புகழுவார்;
மாந்தர் படைப்பு யாவும்
இசைந்து போற்றுவார்.
3. உம்முன்னே குருத்தோலை
கொண்டேகினார்போலும்,
மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்
கொண்டும்மைச் சேவிப்போம்.
4. நீர் பாடுபடுமுன்னே
பாடினார் யூதரும்;
உயர்த்தப்பட்ட உம்மை
துதிப்போம் நாங்களும்.
5. அப்பாட்டைக் கேட்டவண்ணம்
எம் வேண்டல் கேளுமே;
நீர் நன்மையால் நிறைந்த
காருண்ய வேந்தரே. ஆமென்.
0 Comments