Ad Code

ஓசன்னா பாலர் பாடும் | Oosanna Paalar பாடும் | Palm Sunday Song

 ஓசன்னா பாலர் பாடும்

    ராஜாவாம் மீட்பர்க்கே;

மகிமை புகழ் கீர்த்தி

    எல்லாம் உண்டாகவே.


1. கர்த்தாவின் நாமத்தாலே

        வருங் கோமானே நீர்

    தாவீதின் ராஜ மைந்தன்

        துதிக்கப்படுவீர்.


2. உன்னத தூதர் சேனை

        விண்ணில் புகழுவார்;

    மாந்தர் படைப்பு யாவும்

        இசைந்து போற்றுவார்.

  

3. உம்முன்னே குருத்தோலை

        கொண்டேகினார்போலும்,

    மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்

        கொண்டும்மைச் சேவிப்போம்.


4. நீர் பாடுபடுமுன்னே

        பாடினார் யூதரும்;

    உயர்த்தப்பட்ட உம்மை

        துதிப்போம் நாங்களும்.


5. அப்பாட்டைக் கேட்டவண்ணம்

        எம் வேண்டல் கேளுமே;

    நீர் நன்மையால் நிறைந்த

        காருண்ய வேந்தரே. ஆமென்.

Post a Comment

0 Comments