1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந்.திரு.பின்.16ம் ஞாயிறு (திரித்துவ -15)
தேதி: 17.09.2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: ஆதி: 13: 1-12, அப்போ: 6: 1-6, மத்: 20: 1-16 & சங் : 16
2. திருவசனம் & தலைப்பு
பிரிவினை நடுவில் அமைதி
ஆதி 13.8 (பவர் திருப்புதல்)
ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.
ஆதி 13.8 (திருவிவிலியம்)
ஆபிராம் லோத்தை நோக்கி, “எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்படவேண்டாம். ஏனெனில், நாம் உறவினர்.
3. ஆசிரியர் & அவையோர்
பரிசுத்த வேதாகமத்தில் முதலில் உள்ள இந்த புஸ்தகம் மோசேயினால் எழுதப்பட்டது. இஸ்ரவேல் மக்களின் வரலாற்றை மனித சிருஷ்டிப்புடன் ஒப்பிட்டு இந்நூல் விளக்கமளிக்கிறது.
இந்த ஆதியாகம புஸ்தகம் எல்லா மனிதர்களையும் மீட்கும்படி தேவன் ஆபிரகாமை நியமித்து அவரின் வம்சவரலாற்றில் தாமே முன்னின்று மீட்பின் ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறார் என்பதை விளக்குகிறது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
ஆதியாகமம் புத்தகத்தின் உருவாக்கம் ஒரு நீண்ட செயல்முறை. 1440 மற்றும் 1400 B.C.க்கு இடையில், மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியேற்றிய காலத்திற்கும் அவரது மரணத்துக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றன.
5. திருவசன விளக்கவுரை
அதிகாரங்கள் 12 மற்றும் 13 க்கு இடையில், ஆபிராமின் வாழ்க்கையில் ஒரு ஆன்மீக முதிர்ச்சி வெளிப்படுவதைக் காண்கிறோம்.
ஆதி: 13.1 ஆம் வசனத்தில், ஆபிராம், அவர் மனைவி மற்றும் அவர்க்கு உண்டான யாவும் & லோத்தும் எகிப்தை விட்டு தென்தேசத்திற்கு வருகிறார்கள்.
ஆபிராமுக்கு மந்தைகள், வேலைக்காரர்கள் மற்றும் சொத்துக்கள் மட்டும் இல்லை. லோத்தும் நிறைய ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் (ஆதி: 13.5). அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க தேசம் அவர்களைத் தாங்க முடியவில்லை, ஏனென்றால் அவர்களுடைய உடைமைகள் மிகவும் அதிகமாக இருந்தன.
ஆதி: 13.7 ல் ஒவ்வொரு மனிதனின் மேய்ப்பர்களும் தங்கள் எஜமானரின் விலங்குகளுக்கு தண்ணீரையும், சிறந்த மேய்ச்சலையும் தேடினர். இந்தப் போட்டி தவிர்க்க முடியாமல் லோத்து மற்றும் ஆபிராமின் மேய்ப்பர்களுக்கு இடையே மோதலுக்கு வழிவகுத்தது.
ஆபிராம் எழுந்த சண்டைகளை விரைவில் உணர்ந்தார், அவர் ஒரு நல்ல வீட்டுக்காரரின் கடமையை நிறைவேற்றினார், அவர் தனது குடும்பத்தில் அமைதியை மீட்டெடுக்க முயற்சித்தார்.
அவர்களுக்கிடையே உள்ள உறவின் பிணைப்பை அவர் நினைவுபடுத்துகிறார் (ஆதி: 13.8).
ஆபிராம் விரும்பும் நிலத்திற்கு உரிமை கோர அவருக்கு உரிமை உண்டு. ஆண்டவர் தனக்கு வாக்களித்ததை அவர் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அதை செய்யாமல் மனத்தாழ்மையையும், தன்னலமற்ற மனப்பான்மையையும் வெளிப்படுத்தி, சமாதானத்தோடு வாழ, ஆபிராம் இளைய மனிதனாகிய லோத்திடம் இணங்கி நிலத்தின் முதல் தேர்வைக் கொடுத்தார் (ஆதி:13.9).
6. இறையியல் & வாழ்வியல்
இன்று உலகில் எங்க பார்த்தாலும் பிரிவினை காணப்படுகிறது. உலகத்தை ஆளவேண்டியது சமாதானம் தான். மாறாக சமாதானத்தை எடுத்துப்போடுகிற மனிதர்களல்ல. இயேசு கிறிஸ்துவை சமாதான பிரபு என அழைக்கிறோம்.
என் சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார் ( யோவான் : 14:17 ). ரோமர் : 12: 18 ஆம் வசனத்தில் உள்ளது போல நமது தலையாய கடமை
சமுதாயத்திலும், வீட்டிலும் சமாதானம் பன்னுவது & சமாதானத்தை கூறி அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதாகும்.
தன்நிலையில் மெய் சமாதானம் பெற்று, இறைவனோடும், அவர் படைத்த சக மனிதரோடும் ஒன்றுபட்டு இனங்கி சமாதானத்தோடு வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
ஆபிராம் லோத்துடன் தாராளமாக நடந்துகொண்டு சமாதானம் செய்பவராகச் செயல்படுகிறார் (ஆதி:13.8-9). ஆபிராமின் சமாதானமான முடிவே அவரை லோத்துக்கு இந்த வாய்ப்பை வழங்க காரணமாக இருந்தது. சச்சரவுகளைத் தீர்ப்பதற்கும், சண்டைகளைத் தவிர்பதற்கும் இது ஒரு சிறந்த வழி என்று நாம் காண்கிறோம்.
முதலில், நாம் சமாதானம் செய்பவராக, தேவைக்கு அதிகமாக கொடுப்பவராக காணப்படுதல் அவசியமானதாகும்.
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் ( மத்தேயு: 5.9).
7. அருளுரை குறிப்புகள்
0 Comments