Ad Code

ஆபிரகாம்: பரிந்துரை ஜெபம் • Abraham Prayer • SMC

தவக்கால தியானம்: 01
தலைப்பு: ஆபிரகாம்: பரிந்துரை ஜெபம் 
வேத பகுதி:ஆதியாகமம் 18: 16-23; 20:7

வேதாகம நபர் பற்றி:
அப்பா பெயர்: தேராகு 
அம்மா பெயர்: கொடுக்கவில்லை 
உடன் பிறந்தவர்கள்: நாகோர் மற்றும் ஆரான் 

விளக்கவுரை
பிறருக்காக நாம் ஜெபிப்பது அவர்களுக்காக பரிந்துரை இருதயத்தோடு கடவுளை நாடுவதாகும். நாம் பிறருக்காக மன்றாட முன் ஆபிரகாம் போல சில குணாதிசயங்கள் மிகவும் அவசியம். அவைகள்: 
       ஆதியாகமம் 18:22 படி, ஆபிரகாம் தன்னை விட்டு பிரிந்து சென்ற, லோத் என்ற தன் உறவினனுக்காக கடவுள் முன் நின்றார். அவரிடம் இருந்த, பொறுமை மற்றும் ஆண்டவரோடு இருந்த நெருக்கம் வேண்டும். ஆங்கில வேதாகமம் குறிப்பின் படி,”walked along with them“ (18:16,22). என்ன நடந்தாலும் ஆண்டவரோடு நடக்க வேண்டும்! பாவத்தோடு இல்லை; பிரச்சனை யோடும் இல்லை.

       ஆபிரகமுக்கு குமாரன் இல்லை. ஆனால் அவர் அபிமேலக்குகாக விண்ணப்பம் செய்தார். அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார். (20:18, 21:1).

நாம் கற்று கொள்ள வேண்டியது என்ன?
1. நமக்கு எந்த ஆசீர்வாதம் இல்லையோ அதற்காக காத்திருப்போர்காக ஜெபிக்க வேண்டும்.
2. ⁠முக்கியமாக நம்முடைய சொந்த உறவுகளுக்காக ஜெபிப்பது மிகவும் அவசியம்.
3. பிறருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பிறர் நன்மைக்காக பரிதபியுங்கள்!!

எழுதியவர்
திரு. T. டைட்டஸ் 

Coordinated by
SMC Youth Fellowship 

Post a Comment

0 Comments