தவக்கால தியானம்: 02
தலைப்பு: எலெயாசார்: திருமணத்திற்கான ஜெயம்
வேத பகுதி: ஆதி 24:12-14
வேதாகம நபர் குறிப்பு:
எலெயாசார், ஆபிரகாமின் விசுவாசமான ஊழியக்காரரான இவரை தம் மகன் போல் பாவித்தவர்.
ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கிற்கு மனைவியை தேடுவதற்காக, மிகப்பெரிய பொறுப்பை எலெயாசாரிடம் ஒப்படைத்தார்.
விளக்கவுரை:
தேவனிடம் வழிகாட்டுதலை நாடுதல்:
எலெயாசார் தனது பயணத்தின் முற்பகுதியில் மிகவும் முக்கியமான காரியத்தைச் செய்தார் – அவர் முதலில் தேவனிடம் ஜெபித்தார். “கர்த்தாவே, எனது எஜமானரான அபிரகாமின் தேவனே, இன்று என் வழியை ஒழுங்குசெய்யும் படிக்கு தயை செய்யும்” (ஆதி 24:12). இது எலெயாசாரின் முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
நம்பிக்கையுடன் செயல்படுதல்:
எலெயாசார் ஒரு குறியீட்டை தேவனிடம் கேட்டார். அவர் கூறியது, “நான் ஒரு பெண்ணிடம், ‘தயவுசெய்து, நீ உன் குடத்தில் இருக்கிற தண்ணீரை எனக்கு கொடு’ என்று சொன்னபோது, அவள் ‘உம், நீ குடித்துக்கொள், உன் ஒட்டகங்களுக்கும் நான் ஊற்றி விடுகிறேன்’ என்று சொன்னால், அவளே கர்த்தர் தேர்ந்தெடுத்தவர்” (ஆதி 24:14).
தேவனின் தெளிவான பதில்:
எலெயாசாரின் ஜெபத்திற்குத் தேவன் உடனடியாக பதில் அளித்தார். ரிபேக்கா வந்தவுடன், அவர் எதிர்பார்த்த குறியீட்டை ஏற்படுத்தினார். இது, தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கக்கூடியவர் என்பதையும், நாம் அவரிடம் முறையிட்டால், அவர் நம்மை வழிநடத்துவார் என்பதையும் காட்டுகிறது.
கற்றுக்கொள்ளும் பாடம்
எலெயாசாரின் வாழ்க்கை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது. நாம் எதைச் செய்தாலும், தேவனின் வழிகாட்டுதலை நாட வேண்டும். எலெயாசார் தனது அறிவால் அல்ல, தேவனின் கிருபையால் வழிநடத்தப்பட்டார். நாமும் நம் வாழ்க்கையில் எந்த முக்கியமான முடிவுகளை எடுக்க இருந்தாலும், முதலில் தேவனிடம் ஜெபம் செய்ய வேண்டும். தேவன் நம்மை சரியான பாதையில் நடத்துவார்.
எழுதியவர்
இ. கரண்சிங்
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments