Ad Code

யோசேப்பு ஏன் குடிமதிப்பு (Tax Not Census) எழுத "பெத்லெகெமுக்கு" வந்தார்?

யோசேப்பு நாசரேத்தில் வாழ்ந்தார், அங்கேயே திருமணமும் செய்து கொண்டார். பிறகு ஏன் குடிமதிப்பு (Tax Not Census) எழுத "பெத்லெகெமுக்கு" வந்தார்?

அனைவரும் தங்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய தேவை அதிகம் இல்லை.

கலிலேயாவும், யூதாவும் வேறு வேறு சட்ட அதிகார எல்லையைக் (Jurisdiction) கொண்டவை.

யோசேப்பு, கலிலேயாவில் வாழ்ந்தாலும் "யூதா"-வின் சட்ட அதிகாரத்துக்கு (Jurisdiction) உட்பட்டவர்.

மரியாள் "கலிலேயா சட்ட அதிகாரத்துக்கு" (Jurisdiction) உட்பட்டவர்; ஆயினும் யோசேப்பை விவாகம் செய்ததால்,ரோம சட்டத்தின்படி அவர் தாமாகவே யூதா சட்ட அதிகாரத்துக்கு உட்பட்டவராகின்றார். ஆகவே அவரும் "பெத்லெகெம்" வர வேண்டியதாயிற்று.

சில பத்திரிக்கைகள் டில்லியில் வெளியாகும், தமிழிலும் வெளிவரும். தமிழில் நாட்டிலும் அலுவலம் இருக்கும்; ஆனால் அந்த பத்திரிக்கையில் "சட்டப் பிரச்சனைகள், டில்லிக்குட்பட்ட நீதிமன்றங்களிலே மட்டுமே தீர்க்கப்படும்" என்றிருக்கும்.

அது போன்ற நடைமுறை தான் யோசேப்பின் வாழ்வில் காணப்பட்டது; அது தீர்க்கதரிசனத்தின் வாயிலாக நிறைவேறினது.

Post a Comment

0 Comments