உபத்திரவத்தில் உறுதியாக
சங்கீதம் 31, ஆழ்ந்த துயரம், துன்புறுத்தல் மற்றும் கைவிடப்பட்ட நிலையில், புலம்பலின் மத்தியில் விடுதலையின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் தாவீதின் சங்கீதமாகும். இது பெரும்பாலும் சவுலிடமிருந்து தப்பி ஓடிய அவரது ஆபத்தான வாழ்க்கையை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. இயேசு சிலுவையில் அனுபவித்த சூழலை இந்த சங்கீதம் முன்னுரைத்துள்ளது.
நண்பர்கள் அவரைக் கைவிட்டாலும், தாவீது கடவுளை தனது கற்பாறையாகவும் கோட்டையாகவும் அடைக்கலம் காண்கிறார். தாவீது எதிரிகளுக்கு எதிராக உதவிக்காக கடவுளிடம் கூக்குரலிட்டுகிறார், தனது ஆவியை அவரிடம் ஒப்படைத்து கடவுளின் நன்மைக்கான துதியுடன் இந்த சங்கீதத்தை முடித்துள்ளார்.
ஆழ்ந்த துன்பங்களுக்கு மத்தியிலும், கடவுள் தமக்குப் பயந்தவர்களுக்காக நன்மையைச் சேமித்து வைத்திருக்கிறார். இது உபத்திரவத்திலிருந்து உறுதிப்பாட்டிற்கான பயணத்தை கற்றுத்தருகிறது. உபத்திரவ பாதையில் உறுதியாக இறைவனை பிடித்துக்கொள்வோம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments