இறைநிழலில் தஞ்சம்
சங்கீதம் 36 இல் தேவபக்தியற்றவர்களின் ஆழமான துன்மார்க்கமான வஞ்சனையை கடவுளின் உறுதியான அன்போடு தாவீது வேறுபடுத்திக் காண்பிக்கிறார். இது கடவுளின் ஏராளமான கருணை மற்றும் அடைக்கலத்தை நம்பி
எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விடுதலைக்கான ஜெபமாக உள்ளது.
இந்த சங்கீதம் மனித பாவத்தை விவரிப்பதில் இருந்து (வசனம் 1-4) கடவுளின் உலகளாவிய மற்றும் சிறப்பு ஆசீர்வாதங்களைக் கொண்டாடுவதற்கு (வசனம் 5-9) நகர்கிறது, கடவுளின் நீதி மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு வேண்டுகோளுடன் (வசனம் 10-12) பாடப்பட்டுள்ளது. சங்கீதக்காரன் கடவுளின் அன்பான தயவில் பாதுகாப்பையும் திருப்தியையும் காண்கிறார்.
துன்மார்க்கரின் தற்போதைய போராட்டங்கள் எதிராக இருந்தபோதிலும், கடவுள் நீதிமான்களை, தமது செட்டைகளின் நிழலிலே வரச்செய்து, அவர்களை நியாயப்படுத்தி தம் ஆலயத்தின் நன்மையினால் திருப்தியடையவும், அவரின் வெளிச்சத்தில் வெளிச்சம் காணவும் செய்வார் என்ற நம்பிக்கையுடன் சங்கீதம் முடிகிறது. இந்த உறுதியான நம்பிக்கையில் இறை நிழலில் நாமும் தஞ்சம் புகுந்து வாழ்வோம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments