Ad Code

மத்தேயு நற்செய்தி – அறிமுகம் Matthew Gospel • Bible Carnival 1.3

✨ மத்தேயு நற்செய்தி –  அறிமுகம் 

 👤 நூலாசிரியரைப் பற்றிய செய்தி 

மத்தேயு, ஒரு யூத கிறிஸ்தவர் என்பதை:
👉 மத்தேயு 9:9
👉 மத்தேயு 10:3
இவற்றின் மூலம் அறியலாம்.

அவர் ரோம அரசின் கீழ் வரி வசூலிப்பவராக (Tax Collector) பணியாற்றினார்.

🏷️ வேறு பெயர் மற்றும் குடும்பம்

மத்தேயுவுக்கு லேவி என்ற வேறு பெயரும் இருந்தது

👉 இது மாற்கு மற்றும் லூக்கா நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது
அவரது தந்தையின் பெயர்:

👉 அல்பேயு (மாற்கு 2:14)

👉 இயேசு, சீமோனுக்கு “பேதுரு” என்று பெயர் வைத்தது போல,
லேவிக்கு “மத்தேயு” என்ற புதிய பெயர் வைத்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

 ⚠️ சமூகத்தில் நிலை

அக்காலத்தில்,
வரி வசூலிப்பவர்களை மக்கள் வெறுத்தனர்.

👉 அதனால் மத்தேயுவும் சமூகத்தில் வெறுக்கப்பட்டவராக இருந்தார்.

📌 “மத்தேயு” என்ற பெயரின் பொருள்:
“கடவுளின் ஈவு” (Gift of God)

🕰️ எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

இந்நூல் சுமார் கி.பி. 68 ஆம் ஆண்டு,
பாலஸ்தீனாவில் அல்லது
சீரியாவின் அந்தியோகியாவில்
எழுதப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

🎯 நூலின் சிறப்பான நோக்கம் 

இயேசு பெருமாளை யூதர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த _மேசியாவாக_ காட்டுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.
இயேசு பெருமானுடைய வாழ்க்கை, பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலாகவே இந்நூலில் விளங்குகிறது.

📜 வம்ச வரலாறு மற்றும் வாக்குத்தத்தங்கள் 

இந்நூலின் தொடக்க வசனத்தில்:
“ _ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு_ ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரண்டு முக்கியமான வாக்குத்தத்தங்கள் வெளிப்படுகின்றன:

👉 ஆபிரகாமோடு:

“உன் மூலமாக பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் ஆசீர்வதிக்கப்படும்”

👉 தாவீதோடு :

“உன் சந்ததி என்றென்றும் ஆட்சி செய்யும்”

👉 .இந்த இரண்டு வாக்குத்தத்தங்களும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் நிறைவேறுகின்றன.

👑 இயேசுவின் அரசாட்சி மற்றும் தியாகம்

மத்தேயு நற்செய்தியில்,
யூதருக்கு அரசராகப் பிறந்த இயேசு, இறுதியில் உலக மக்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும் உயிர்ப்பலி தியாகியாக காணப்படுகிறார்.

👉 தொடக்கத்தில் அவர் யூத நாட்டோடு தொடர்புபடுத்தப்படுகிறார்.

👉 பின்னர் அவர் மக்கள் யாவருக்கும் இரட்சகராக வெளிப்படுகிறார்

 🔍 பழைய ஏற்பாட்டுடன் தொடர்பு

மத்தேயு நூல் முழுவதும்
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகின்றன
யூதர்களின் வரலாறு மற்றும் பழக்க வழக்கங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன

👉 இதன் மூலம் யூதர்களின் பண்புகள் நமக்கு தெளிவாக தெரிகின்றன.

📍 பிறப்பின் தீர்க்கதரிசனம்

தாவீதின் ஊரான பெத்லகேமில்,
யூதருக்கு ராஜாவாகிய இயேசு பிறந்தார்.

👉 இது மீகா 5:2 இல் முன்கூட்டியே தீர்க்கதரிசிக்கப்பட்டது.

📚 வரலாற்றுப் பின்னணி

பழைய ஏற்பாட்டின் கடைசி நூலான

👉 மல்கியா தீர்க்கதரிசன நூல்
இதற்குப் பிறகு சுமார் 400 ஆண்டுகள் அமைதி காணப்பட்டது.

👉 அதன் பின்னரே இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது.

🔢 “40” என்ற எண்ணின் முக்கியம்

மத்தேயு, திருமறையின் 40வது நூல் ஆகும்.
இந்த “40” எண்ணுக்கு வேதாகமத்தில் சிறப்பு உள்ளது:

மோசே மீதியான் தேசத்தில் 40 ஆண்டுகள் தங்கி இருந்தார்.

இஸ்ரவேலர் 40 ஆண்டுகள் வழிநடத்தப்பட்டனர்.

தாவீது 40 ஆண்டுகள் அரசாண்டான்.

யோனா: “இன்னும் 40 நாளில் நினிவே அழியும்” என்று கூறினார்.

👉 இதனால், மத்தேயு நூலும் ஒரு மாற்றக் கட்டத்தை குறிக்கும் முக்கிய நூல் ஆகும்.

❗ யூதர்களின் மறுப்பு

நாற்பதாவது நூலாகிய மத்தேயு காட்டுவது:

👉 மேசியாவாக வந்த இயேசுவை யூதர்கள் சோதனைக்குரியவராகவே பார்த்தனர்

👉 அவர்
அரசராகவும்
இரட்சகராகவும் வந்தாலும்,

அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளி விடுகின்றனர்.

Written by
Bro. Sanjay 

Post a Comment

0 Comments