அந்திரேயா: இயேசுவை அறிமுகப்படுத்துவோம்
1. பெயர்: அந்திரேயா Andrew
2. அர்த்தம்: மனிதத்தன்மை அல்லது தைரியம்
3. சிறுகுறிப்பு:
• புனித பேதுருவின் உடன்பிறந்த சகோதரர்
• இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர்
• கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊர்.
• இயேசுவை மெசியா என்று கண்டுகொண்ட அந்திரேயா, உடனே தன் சகோதரரான சீமோன் பேதுருவிடம் சென்று அவரை இயேசுவிடம் அழைத்து வந்தார்.
• 5 அப்பங்களும் 2 மீன்களும் வைத்திருந்த ஒரு சிறுவனை இயேசுவிடம் அடையாளம் காட்டியவர்.
• பல நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவ நற்செய்தியைப் போதித்த இவர் கிரேக்க நாட்டின் பத்ராஸ் (Patras) என்ற இடத்தில் 'X' வடிவ சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு மரணமடைந்தார்.
4. கற்றுக்கொள்ளும் பாடம்:
அந்திரேயா தான் மெசியாவைக் கண்டால் போதும் என்றில்லாமல், தன் சகோதரர், பிலிப்பு, இவர் மூலம் நாத்தான்வேல், கிரேக்கர்கள் இயேசுவை அறிய வழிவகுத்தார். விவிலியத்தில் அந்திரேயா பெரிய போதனைகளைச் செய்ததாகவோ, பெரிய அற்புதங்களைச் செய்ததாகவோ விரிவாக எழுதப்படவில்லை. ஆனால், அவர் "இயேசுவிடம் மக்களைக் கொண்டு சேர்க்கும் பணியை" (Ministry of Introduction / Bringing) மிகச் சிறப்பாகச் செய்தார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
இயேசு -அந்திரேயா - பிலிப்பு சந்திப்பு (யோவான் 1:35–42)
ஊழிய அழைப்பு (மத்தேயு 4:18–20 & மாற்கு 1:16–18)
5 அப்பம் & 2 மீன்கள் (யோவான் 6:8–9)
கிரேக்கர் இயேசுவைக் காணுதல் (யோவான் 12:20–22)
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments