Ad Code

உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம் I Urukaatho Nenjam Avarthane Thanjam I Lent Song in Tamil

   
   உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்
   உனக்காக பலியாக வந்தார்
   கலங்காதோ கண்கள் வழியாதோ கண்ணீர்
   கல்வாரி காட்சியைக் கண்டு.

1. நடமாட முடியாத தடுமாறிக் கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்று
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாடச் செய்ததாலே
       உந்தன் கால்களில் ஆணியோ அரசே!
       அது தான் சிலுவையின் பரிசே!
2. கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்
கதறிய மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தோட்டு
கருணையாய் சுகம் தந்ததாலே
       உந்தன் கரங்களில் ஆணியோ அரசே!
       அது தான் சிலுவையின் பரிசே!
3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிகின்ற ஆத்துமா
பாவத்தை நீக்கி பாவியை மீட்டு
இரட்சிப்பின் வழி தந்ததாலே
       உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே!
       அது தான் சிலுவையின் பரிசே!

Post a Comment

0 Comments