வேதாகமத்தின்படி உலகத்திலுள்ள நாடுகள் எப்படி உருவாகின? என்பதைப் பாா்போம்.
பெருவெள்ளத்திற்குப் பிறகு உலக முழுவதும் ஒரே விதமான தட்ப வெப்பநிலை உருவானது. இதுவே மக்கள் கண்ட முதல் மழை என்பது குறிப்பிடத்தக்கது.  
நோவாவின் மூன்று மகன்களான சேம் (5 குமாரர்கள்) – காம் (4 குமாரர்கள்) யாப்பேத் 7 குமாரர்கள்) – ஆதி 10: 1 -30) இவர்கள் மூலம்,
ஆதியாகமம் 9: 19                  இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.
ஐரோப்பா,  ஆசியா,  தென் கிழக்கு ஆசியா,  கானான்,  மத்திய கிழக்கு (இஸ்ரவேலும்) நாடுகள் உருவாகின. 
நோவாவின் தீர்க்கதரிசனம்: 
ஆதியாகமம் 9: 27.                    யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான். 
யாப்பேத்தின் 7 குமாரர்கள் 
 (ஆதி 10: 2- 5)  (14குடும்பங்கள்)
கோமர்    – பிரான்ஸ், ஸ்பெயின்,                                ஜெர்மன்,  வேல்ஸ்
மாகோகு  – ருமானியா,  உக்ரெயின்
மாதாய்    – மேதிய ஈரான் (மீதியானியர்)
யாவான்  –  கிரேக்கம்
தூபால்   –    ஜார்ஜியா 
மேசேக்கு –  மாஸ்கோ
தீராஸ்        –  மெசடோனியா                                              & யுகஸ்லோவியா 
காமின் குமாரர்கள்  
(ஆதி 10: 5- 20)   (30 குடும்பங்கள்) 
கூஷ்              – எத்தியோப்பியா 
மிஸ்ராயீம்   –   எகிப்து 
பூத்                 –   லிபியா 
கானான்      – கானான் தேசம்                                             – பெலிஸ்தியர்                       (ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர்)
சேமுடைய குமாரர்கள்:                      
  (ஆதி 10: 21- 30)    (26 குடும்பங்கள்)
ஏலாம்        –  ஈரான் 
அசூர்        –  அசரீயா 
அர்பக்சாத் – கல்தேயர் (பாபிலோனியர்)    (அரபியர்)
லூத்            – லிதியா 
ஆராம்        – சீரியா  
   (ஆப்ரகாம் சேமின் வம்சத்தில் வருகிறார் – நோவாவின் மூன்று சகோதரர்கள் மூலம் ( 14 + + 30 +26)    70 குடும்பங்கள் எகிப்தில் நுழைந்தார்கள்)
ஆதார வசனம்: 
ஆதியாகமம் 10: 32.                        தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன. 
இதுவரை உலகமெங்கும் ஓரே மொழியான எபிரேயமே இருந்தது.
 

 
 
 
 
 
 
 
0 Comments