தலைப்பு: மனாசே: கெஞ்சுதலின் ஜெபம்
வேத பகுதி: 2 நாளாகமம் 33
வேதாகம நபர் குறிப்பு:
தகப்பன் : எசேக்கியா ராஜா
தாய் : எப்சிபாள்
பொறுப்பு: யூத தேசத்து ராஜா
பன்னிரண்டு வயதில் எருசலேமில் ராஜாவானான்.
ஐம்பததைந்து வருடம் அவன் எருசலேமை அரசான்டான்
விளக்கவுரை:
மனாசே கர்த்தருக்கு விரோதமாகவும் தன் தகப்பன் எசேக்கியா தேவனை தேடினது போல தேடாமல் விக்கிரகங்களை உண்டு பண்ணி சேவித்து வந்தான்.
அவன் கர்த்தர் இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக துரத்தி விட்ட எல்லா அருவருப்பையும், பலிபீடங்களையும், விக்கிரக தோப்பையும் உண்டாக்கி அதை சேவித்து கர்த்தரை கோபப்படுத்தினான்.
அவன் உலக காரியமான நாள் பார்க்கிறது, குறி கேட்கிறது, பில்லிசூனியம் செய்வது மற்றும் தன் மகனை தீமிதிக்க பண்ணுவது போன்ற சகல அருவருப்பையும் செய்து வந்தான்.
கர்த்தர் அவனை எச்சரித்தும் அவன் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. அப்பொழுது கர்த்தர் அவனை அசீரியாவின் ஸ்தானாபதிகளின் கையில் அவனை ஒப்பு கொடுத்தார்.
அவர்கள் அவனை நெருக்கின போது அவன் கர்த்தரை நோக்கி அவன் கெஞ்சி ஜெபித்தான். கர்த்தர் அவனுடைய கெஞ்சுதலுக்கு இரங்கினார். அப்புறம் அவன் அந்த அருவருப்பை செய்யாமல் கர்த்தரை சேவித்து வந்தான். அவன் கர்த்தருக்கு விரோதமாக செய்த எல்லா அருவருப்பையும் சீர்படுத்தி கர்த்தரை தேடினான்.
கற்றுக்கொள்ளும் பாடம்
நாமும் நம்முடைய பாவத்தை உணர்ந்து கர்த்தரை நோக்கி கெஞ்சி ஜெபிக்க வேண்டும். அப்போது கர்த்தர் மனம் இரங்கி நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை ஆசீர்வதிப்பார்.
எழுதியவர்
S. கிளிண்டன்
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments