பாவ மன்னிப்புக்கான இருதயம்
சங்கீதம் 51 தாவீது அரசர் தன் பாவத்தை உணர்ந்து, இறைவனிடம் பாவ அறிக்கை செய்து எழுதியதாகும். தாவீது பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தது, மற்றும் அதைத் தொடர்ந்து அவளது கணவர் உரியாவின் கொலை செய்தது குறித்து நாத்தான் தீர்க்கதரிசி தாவீதை எச்சரித்தப் பிறகு தனது தவறை உணர்ந்தது குறித்து 2 சாமுவேல் 11 & 12-ல் வருகிறது.
இந்த சங்கீதம், தாவீதின் தனிப்பட்ட ஒப்புதல் வாக்குமூலமாகவும் "சுத்தமான இதயத்திற்கான" வேண்டுகோளாகவும் செயல்படுகிறது.கருணை, மனந்திரும்புதல் மற்றும் சுத்திகரிப்புக்கான ஆழ்ந்த கூக்குரலாக தாவீது ராஜா இதைப் பாடியுள்ளார். மன்னிப்பு கேட்பதைத் தாண்டி, தாவீது உள் மாற்றத்திற்காக மன்றாடுகிறார், கடவுள் வெளிப்புற தியாகங்களை மட்டுமல்ல, உள் தூய்மையை விரும்புகிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார்.
"மனந்திரும்பிய தாவீது மீண்டும் இப்பாவத்தில் விழவில்லை"
1. தவறை ஏற்றுக்கொள்ளும் இருதயம்
2. தவறை அறிக்கையிடும் இருதயம்
3. தவறை விட்டுவிடும் இருதயம்
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments