இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
இப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலூயா பார் அதோ
கல்வாரியிலே அதோ ஐந்தாறு கூடி ஓடுதே
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுதே
1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்
பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான்
2. ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இரத்தமே
தீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே
3. ஆவியால் நிறைந்து தேவ சாயலாக்கினார்
தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார்
4. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே
5. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே
பின்னடையா சிலுவை கொட உயர்த்துவோம் நாமே

0 Comments