Divine Mishpat for the Redemption
மீட்பிற்கான இறைநீதி
(ரோமர் 3. 24 - 25)
திருமறையில் மிஷ்பாட் (நீதிக்கான எபிரெய வார்த்தை) என்பது வெறும் சட்ட நியாயம் மட்டுமல்ல, விஷயங்களைச் சரிசெய்யவும், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும், உடைந்த உறவுகளை மீட்டெடுக்கவும் கடவுளின் அழைப்பாகும்.
ஆம், நீதியின் கடவுள், பாவ மனுக்குலத்தைத் தண்டிக்க விரும்பவில்லை; மாறாக, கிறிஸ்து இயேசுவின் சிலுவையின் வாயிலாக மீட்பை வழங்கினார்.
1. மீட்பு: இறைநீதிக்கான இறைவிருப்பம்
Redemption: God's Will for the Divine Mishpat
ரோமர் 3. 24 - 25 வசனங்களில், பவுல் அடிகளார், மனுக்குலத்தை தண்டியாமல், பொறுத்துக்கொண்டதைக் குறிப்பிடுவது, இறை நீதியில் (மிஷ்பத்) மனுக்குலம் மீட்கப்படுகின்ற, பிதாவின் விருப்பத்தைக் குறிக்கிறது. "Redemption is not a suspension of divine justice, but a fulfillment of it."
2. மீட்பு: கிறிஸ்துவின் நீதியாக்கும் பரிகாரம்
Redemption: The Justifying Atonement of Christ
மத்தேயு 12:18-21 & ஏசாயா 42 கிறிஸ்துவை நீதியின் பணியாளராக அடையாளப்படுத்துகிறது. "Jesus, the Messiah) is the one who will "bring forth justice (Greek: krisis, related to mishpat) quietly and gently." சிலுவையில், மிஷ்பாத்தும் கிருபையும் ஒன்றிணைகின்றன. கிறிஸ்து பாவத்திற்கான பரிகார தண்டனையைச் சுமந்து, நீதியின் மீட்பை வழங்கினார் (ரோமர் 3:25-26).
3. மீட்பு: மனிதகுலத்திற்கான நீதி
Redemption: The Justification for the Humanity
ரோமர் 3:25-26 வசனங்கள், கடவுளின் சித்தப்படி, மனுக்குலத்தின் இழந்துபோன உறவை மறுசீரமைத்து நீதியாக்குவதையும் விளக்குகிறது. இயேசுவின் வாழ்க்கையும் போதனைகளும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பராமரித்து, சரியான உறவுகளை நிறுவி, கடவுளின் நீதியை உலகிற்குக் கொண்டு வருவதாகும். "Justification of humanity isn't earned; it's a free gift of grace received through faith in Christ."
நிறைவாக....
2026 ஆம் ஆண்டின் தவக்காலத்தில் பயணிக்க இருக்கின்ற நாம், நம்மை நாமே நிதானித்து அறிந்து, இறைநீதியில் நீதியடைய நம்மை அர்ப்பணிப்போம். "இறைநீதியில் மீட்படைந்து நீதிமான்களாவோம்."
சகோ. யே. கோல்டன் ரதிஸ் M.Sc., B.A., B.D.,
அடைக்கலப்பட்டணம் சேகரம்

0 Comments