Ad Code

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை • Tirunelveli Medical College High ground

இந்தியாவிலேயே அதிக அளவிலான படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் முக்கியமானது.... திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை. 2400 படுக்கை வசதிகளைக் கொண்டது.

இந்த கல்லூரியையும், மருத்துவமனையையும் கட்டுவதற்கு காமராஜர் முடிவெடுக்கிறார். திருநெல்வேலியில் அதற்கு பொருத்தமான இடம் தேடுகிறார்.

காமராஜரின் இந்த நோக்கத்தை அறிந்த அவரது நண்பரும், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா, பெட்டை குளத்தைச் சார்ந்த காதர் மீரா சாஹிப் அவர்கள்,தனக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்கிறார்.

அந்த நிலப்பகுதியே இன்று நெல்லையில் "ஹைகிரவுண்ட்" என அழைக்கப்படுகிறது.அங்குதான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் இன்று இயங்குகிறது.

இன்று அந்த இடத்தின் விலைநிலவரமோ ஒருசென்ட் 15 முதல் 20 லட்ச ரூபாய்.., --30,000 சென்ட் × ₹ 20,00,000 × 60,00,00,00,000 அறுபதாயிரம் கோடிகள் ரூபாய் பெருமதிப்பிலான இடத்தை தானம் செய்தவர்

காதர் மீரா சாஹிப் இன்றைய தருணத்தில் நினைவு கூறப்பட வேண்டியவர்

Post a Comment

0 Comments