சிறிது தூரம் சென்றபோது, அடி வாங்கியவன் ஒரு புதைகுழியில் சிக்கிக்கொண்டான். அவனை மற்ற நண்பன் கஷ்டப்பட்டு காப்பாற்றினான். உயிர் பிழைத்தவன், உடனே ஒரு பாறையில் இப்படி செதுக்கினான்: "இன்று என் சிறந்த நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்."
குழப்பமடைந்த நண்பன் கேட்டான், "அடித்தபோது மணலில் எழுதினாய், காப்பாற்றியபோது பாறையில் செதுக்குகிறாயே, ஏன்?" அவன் சொன்னான்: "யாராவது நமக்குத் தீங்கு செய்தால், அதை மன்னிப்பு எனும் காற்று அழித்துவிடும் படி மணலில் எழுத வேண்டும். ஆனால் நன்மை செய்தால், அதை என்றும் அழியாதபடி இதயத்தில் (பாறையில்) செதுக்கி வைக்க வேண்டும்."
நீதி: காயங்களை மறந்துவிடுங்கள்; நன்றிகளை நினைவில் கொள்ளுங்கள்.

0 Comments