இங்கிலாந்து நாடாளுமன்ற மரபில்,
“சபாநாயகரை கைப்பிடித்து இழுத்து வந்து அமர வைக்கும் இந்த மரபு இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறையிலிருந்து வந்தது. மன்னராட்சி காலத்தில், மன்னர் விரும்பும் விஷயங்களை நாடாளுமன்றம் நிராகரித்துவிடும். அதனை மன்னரிடம் கொண்டு போய் சொல்ல வேண்டிய துணிச்சலான பொறுப்பு சபாநாயகருடையது.”
“தன் முடிவை நாடாளுமன்றம் நிராகரித்த கோபத்தில், சபாநாயகருக்கு மன்னர் மரண தண்டனை கூட விதிப்பார். இதனால் சபாநாயகர் பதவிக்கு வர பலரும் பயப்படுவார்கள். சபாநாயகராக ஒருவரது பெயரை அறிவித்தால், ‘தலை தப்பித்தால் போதும்’ என்று அவர் ஓடிவிடுவார். அவரைப் பிடித்து வந்து கட்டாயப்படுத்தி அமர வைப்பதற்காகவே அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கையைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். அதுவே இன்று வரை மரபாகத் தொடர்கிறது.”

0 Comments