உம் வேதத்தை நேசிப்போர்க்கு
வாழ்க்கையில் இடறல் இல்லை
- வேதத்தை நேசிப்போர்க்கு....
1.எஸ்றா வேதத்தை ஆராயவும்
வேதத்தின்படி செய்யவும்
நீதி நியாயத்தை பிரசங்கிக்கவும்
இருதயத்தை பக்குவப்படுத்தினான்
பூரண சமாதானம் பெற்றுக்கொண்டான் 4 -உம் ….
2.பெரோயா பட்டணத்தார் மனோ வாஞ்சையாய் வசனத்தை ஏற்று கொண்டார்கள்
தினம் தோறும் வேதத்தை ஆராய்ந்தார்கள்
நற்குணசாலியாய் மாறினார்கள்
வாழ்க்கை சாட்சியாய் திகழ்ந்தது - (4) உம்
3. கற்பனை கவனித்தால் நலம் நலமே
கண்டும் கேட்டதை செய்யுங்கள்
சந்ததி மணல்தனை போலவும்
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பீர்கள்
உன் சமாதானம் நதியை போலாகும் - (4) உம் ….
4.வேதத்தை மறவேன் ஒருபோதும்
வேதம் என் மகிழ்ச்சி எப்போதுமே
வேதம் என் தியானமே
அவர் வார்த்தை என்னை வழிநடத்தும்
வேதத்தை நேசிப்பேன் (4) உம் …….
0 Comments