திருச்சபையின் திருநாள்களில் வருடம் வருடம் மாறி வரும் தேதிகளில் கிறிஸ்து விண்ணுக்கெழுந்த திருநாள் (DAY OF ASCENSION OF CHRIST) ஒன்றாகும். கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளிலிருந்து 40 ஆவது நாள் கிறிஸ்து பரத்துக்கு ஏறிய திருநாள் ஆகும். பரத்துக்கேறின திருநாள் எப்போதும் வியாழக்கிழமை தான் வரும். ஈஸ்டருக்கு பின்வரும் ஆறாவது வியாழக்கிழமை கிறிஸ்து பரத்துக்கு ஏறிய திருநாள். இந்த நாளிலிருந்து பத்தாவது நாளில் பெந்தேகொஸ்தே /PENTECOST SUNDAY வருகிறது.
கிறிஸ்து தற்போது கடவுளுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்துள்ளார் (மாற்கு 16:19; சங்.110:1). கிறிஸ்து பரத்துக்கேறின சம்பவத்தில் சங்கீதம் 110 ; 2; 68 ஆகிய மூன்று சங்கீதங்களில்/திருப்பாடல்களில் கூறப்பட்ட தீர்க்க தரிசனங்கள் நிறைவேறியுள்ளன:
1. சங். 110 யில் கூறப்பட்ட தீர்க்க தரிசனம் எபேசியர் 1: 19-22; எபேசியர் 1:9/10- யில் நிறைவேறியதைக் கூறகிறது. இயேசு அனைத்தையும் ஆளுகிறவராகவும் பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார் (எபிரேயர் 4:14; 7:24-26).
2. சங்கீதம் 68: 18 யில் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் எபேசியர் 4:8-10 யில் நிறைவேறியது எபேசியர் 1:20-22 யைக் காண்க.
3. சங்.8: எபிரேயர் 2:5-9 வசனங்கள் இயேசு பரமேறிச்சென்ற போது நிறைவேறினதாகக் கூறுகிறது.
0 Comments