Ad Code

வந்ததார் இங்கு எந்தன் வீடு பாடல் வரலாறு • Song History

ஆபிரகாம் பண்டிதரின் வேண்டுகோளுக்கிணங்கி , அவரது இல்லத்தில் நடந்த திருமணத்திற்கு இறைவன் ஒருமுறை ஓர் ஏழைச் சிறுவனாக வந்ததாகவும், யாரென அச்சிறுவனை அவர் வினவியபோது, மரியின் மைந்தனெனக் கூறி மறைந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தையே ஆபிரகாம் அவரெழுதிய ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறார்:

"வந்ததார் இங்கு எந்தன் வீடு தேடி
சிந்தை கோயிலாகக் கொண்ட நாதனோ."
ஆபிரகாம் எழுதிய மற்றுமொரு திருமணப் பாடல் லாலிப் பாடலாகும். தமிழ் நாட்டில் மணமகனையும் மணமகளையும் ஊஞ்சலில் இருத்தி, பெண்கள் அவ்வூஞ்சலை ஆட்டி, லாலி பாடுவது மரபாகும். இதையே, ஆபிரகாம் ஞான மணவாளனான இறைவனைத் தம் உள்ளமெனும் ஊஞ்சலில் இருத்தி, லாலி பாடி மகிழ்கிறார்!

வானம் புவி யாவும் செய்த வல்லவா தேவா
ஏழையுருவாக வந்த - ஏழையுருவாக வந்த
இன்பமே வா வா - லாலிலா லையா லாலி.
நாதவடிவான இறைவனை ஆராதிக்க மிகச்சிறந்த வழி, அவரைப் போற்றிப் பாடுவதே. எனவே, நம் வாழ்வின் அனைத்து வைபவங்களிலும், நாத நற்சொரூபனை நாமும் பாடித் துதிப்போமா?

Post a Comment

0 Comments