"ஸ்ரீ மா தேவா -
திருவருள் புரிய இத்தருணமிங்கு நீயும் வா
வானம் பூமி வாழவந்த மானுவேலனே
தீனத் துயர் நின்று மீட்ட தேவ பாலனே
ஞான மணவாளனான நாதன் நீர் வர
கானம் பாடிக் காத்திருந்து கனிந்து கும்பிட்டேன்
-ஸ்ரீ மா
எண்ணும் நன்மை யாவும் தர என்னோடே இரும்
இன்னதென்று சொல்லு முன்பே தந்து கொண்டிரும்
முன்னம் சென்று தங்குமிடம் காத்துக் கொண்டிரும்
இந்த வேலைக் காருமில்லை என்று கூப்பிட்டேன்
-ஸ்ரீமா"
திருமண வைபவ ஆயத்தங்களின் பலவித வேலைகளில் அமிழ்ந்து தவிக்கும் வேளையில், அழைப்பை ஏற்று , கானா ஊர்க் கலியாணத்தில் வந்திருந்து , குறைவை நிறைவாக்கிய நம் இறைவன் இயேசு, இம்மானுவேலாக நம்மோடு இருக்கிறார், என்ற நல்நம்பிக்கை, எத்தனை ஆனந்தத்தையும் புதுபெலனையும் நமக்களிக்கின்றது!

0 Comments