சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் (காட்டுவளவு பகுதி) மது போதையில் ஏற்பட்ட மோதலில் 19 வயது மாணவர் கோகுல் என்பவர், அவரது நண்பர்கள் மூவரால் கத்தியால் குத்தி மே 10, 2026 அன்று இரவு சுமார் 8 மணியளவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாதகாப்பட்டியைச் சேர்ந்த கோகுல் (19) மற்றும் அவரது நண்பர்கள் (17 வயதுடைய சிறுவர்கள்) மது அருந்திக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோகுலைச் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொலை செய்த சிறுவர்கள், அதனைத் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டாடியது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்தச் சூழல் மாற பெற்றோர், ஆசிரியர்கள் சரியான விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். இளைய சமுதாயம் காக்கப்பட தொடர்ந்து ஜெபிப்போம்....

0 Comments